08 ஆம் திகதி முதல் 2ஆம் கட்ட Sinopharm தடுப்பூசி

எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட Sinopharm தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத் தளபதி

by Staff Writer 31-05-2021 | 2:38 PM
Colombo (News 1st) Sinopharm இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மே மாதத்தில் Sinopharm முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இடங்களிலேயே, இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, Sinopharm முதலாவது தடுப்பூசி 65104 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஸ்புட்னிக் முதலாவது தடுப்பூசி 1680 பேருக்கும் எஸ்ட்ரா செனெக்கா கொவிஷீல்டின் இரண்டாவது தடுப்பூசி 193 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Sinopharm மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கை கொழும்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.