by Staff Writer 31-05-2021 | 9:33 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று நேற்று (30) பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டது.
இங்கினியாகல பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பஸ்ஸில் இருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இன்று (31) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்தக் காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்து செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.