by Staff Writer 29-05-2021 | 4:03 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் இடைக்கிடையே தீ பரவுவதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்தது.
கப்பலை குளிர்விப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார்.
வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்வர முடியும் என அவர் கூறினார்.
தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலுள்ள கொள்கலனொன்றில் இன்று அதிகாலை வெடிச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.