COVID-19 காரணமாக இதுவரை  1,363 பேர் உயிரிழப்பு

COVID-19: இதுவரை 1,363 மரணங்கள், இன்று 2,039 பேருக்கு தொற்று

by Staff Writer 29-05-2021 | 9:02 PM
Colombo (News 1st) மேலும் 2,039 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,79,750 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 2,029 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றினால் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,391 ஆக அதிகரித்துள்ளது. 27,957 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 3 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். ஏனைய 36 பேரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர். இதன் பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.