தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 793 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 793 பேர் கைது

by Staff Writer 29-05-2021 | 12:12 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 793 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகளவானோர் மாத்தளை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 16,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், அனைவரையும்  வீடுகளிலேயே இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (28) ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, கொள்ளுப்பிட்டி மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் 04 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனைத் தவிர, பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 4,607 முச்சக்கரவண்டிகள் மேல் மாகாணத்தில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.