யாழ். மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

யாழ். மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

யாழ். மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 May, 2021 | 9:34 am

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் அடுத்த கட்டம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதனிடையே மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதுடன், ரஷ்யாவின் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்