X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை விசாரணை நடத்தி வௌிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை விசாரணை நடத்தி வௌிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை விசாரணை நடத்தி வௌிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2021 | 8:25 pm

Colombo (News 1st) X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை வௌிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அமிலக் கசிவைத் தொடர்ந்து கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்றுள்ளது. எனினும், அமிலக் கசிவு காரணமாக கட்டார் அரசு கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.

அவ்வாறாயின், இவ்வாறு அபாயம் நிலவும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் கடற்பரப்பிற்குள் திடீரென எவ்வாறு பிரவேசித்தது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து பலமுறை பேசும் அரசாங்கம், இலங்கை கடற்பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்