தளர்வின்றி 7ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு

பயணக் கட்டுப்பாடு தளர்வின்றி 7 ஆம் திகதி வரை ​தொடரும்

by Chandrasekaram Chandravadani 28-05-2021 | 1:29 PM
தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு தளர்வின்றி  ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படாது என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நடமாடும் வியாபாரிகளூடாக பொருட்களை விநியோகிக்க மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.