கப்பலில் தீ பரவிய பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம்

கப்பலில் தீ பரவிய பகுதியில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தம்

by Staff Writer 28-05-2021 | 6:28 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் தீ பரவிய கடற்பிராந்தியத்தில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் கொழும்பு, கம்பஹா மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். கடந்த இரு தினங்களாக கொள்வனவு செய்யப்பட்ட மீன்கள் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்பிராந்தியத்திற்குள் மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறித்த கடற்பிராந்தியத்தில் ஆய்வுகள் நிறைவு பெறும் வரை மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.