by Staff Writer 27-05-2021 | 4:00 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் தயாரிக்கப்படும் Sputnik-V தடுப்பூசிகள் 50,000 இன்றிரவு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, சீனாவினால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியில் 1,25,000 தடுப்பூசிகள் மூன்று மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று ஏற்றப்படுகிறது.
குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கொரோனா தொற்று அபாயமுள்ள பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.