மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 27-05-2021 | 5:33 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 128 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே இதுவரை மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட COVID-19 தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கையாகும். நேற்று (26) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (26) வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனைகளில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாவர். இவ்விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றாளர்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அங்கு கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வௌி மாவட்டங்களுக்கு தொற்றாளர்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.