7 பேரையும் விடுவிக்க வேண்டாம்:சுப்பிரமணியன் சுவாமி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும் விடுவிக்க வேண்டாம் என சுப்பிரமணியன் சுவாமி ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 26-05-2021 | 2:16 PM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் வாழ்நாள் இறுதி வரை சிறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் கோரியுள்ளார்.