மற்றுமொரு கைதி தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

by Staff Writer 26-05-2021 | 8:40 PM
Colombo (News 1st) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி, இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 04 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காலி பகுதியை சேர்ந்த 38 வயதானவரே இன்று அதிகாலை தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தப்பிச்சென்றவரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.