யாழில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பெண் இராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் அணி

by Staff Writer 25-05-2021 | 5:31 PM
Colombo (News 1st) யாழ். நகரில் பயணத் தடை தளர்த்தப்பட்ட இன்றைய தினம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெண் இராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணத் தடை தளர்த்தப்பட்ட இன்றைய தினம் மக்களின் போக்குவரத்தினை கட்டுப்படுத்த​ பெண் இராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் அணி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் பிரதான வீதிகள், சந்திகள் மற்றும் வீதி சமிக்ஞைகள் காணப்படும் இடங்களில் இவர்களின் சேவையை அவதானிக்க முடிந்தது. யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் நெறிப்படுத்தலில் நகரப் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.