39M ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

by Staff Writer 23-05-2021 | 2:12 PM
Colombo (News 1st) யாழ். தொண்டமானாறு - ஊரிக்காடு கடற்கரையில் 131.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு (22) 10.30 மணியளவில் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 4 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை சுமார் 39 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையினரால் எரியூட்டப்பட்டது.