மின்னல் தாக்கிய 17 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி 

by Staff Writer 23-05-2021 | 4:53 PM
Colombo (News 1st) கொட்டகலை - டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கிய 17 பேர், கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (23) காலை தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரிந்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாவித்ரி ஷர்மா தெரிவித்துள்ளார்.