கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவிப்பு

23 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவிப்பு

by Staff Writer 22-05-2021 | 6:40 PM
Colombo (News 1st) நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் நாளை (23) முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தென்மேல் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த திகதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுவடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.