English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 May, 2021 | 2:43 pm
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்தின் போது, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவித்தார்.
எனினும், அதனை மீறி புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, அவர்களை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு தாம் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் மேலும் தெரிவித்தார்.
17 May, 2022 | 08:12 PM
13 Apr, 2022 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS