இன்று 2,891 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 2,891 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 21-05-2021 | 6:50 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 2,891 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,57,677 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 1,828 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,25,360 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 1089 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.