by Staff Writer 21-05-2021 | 2:47 PM
News 1st (Colombo): சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ற் கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.