V-FORCE தமிழ் மொழி மூல தலைமைத்துவ செயலமர்வின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றது

by Staff Writer 20-05-2021 | 8:54 PM
Colombo (News 1st) நாட்டின் நாளைய தலைமுறையினரிடையே தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் V-FORCE ஏற்பாடு செய்திருந்த தமிழ் மொழி மூல தலைமைத்துவ செயலமர்வின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றது. சவால்களை வெற்றிகொள்ளும் துணிவினை இளவல்களிடையே மேம்படுத்தும் நோக்கில் V-FORCE தலைமைத்துவ செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலமான தலைமைத்துவ செயலமர்வின் முதல் அமர்வில் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் தலைமைத்துவ பண்புகள் தொடர்பில் விசேட உரையாற்றினார். தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதில் அதீத ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான இளவல்கள் ZOOM மற்றும் FACEBOOK ஊடாக இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர். இவர்களில் V-FORCE தன்னார்வ அங்கத்தவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர். எதிர்காலத்திலும் இவ்வாறான தலைமைத்துவ செயலமர்வுகளை முன்னெடுக்கவுள்ள V-FORCE, பங்கேற்கும் அனைவருக்கும் தலைமைத்துவ பயிற்சி சான்றிதழை வழங்கவுள்ளமை விசேட அம்சமாகும்.