துறைமுக நகர் சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு

by Staff Writer 20-05-2021 | 8:22 PM
Colombo (News 1st) துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகே இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் இருந்ததாக பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தனர். எனினும், எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சட்டமூலத்திற்கு தீயிட்டு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.