மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொரோனா

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொரோனா

by Staff Writer 19-05-2021 | 6:13 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் தம்மிக்க அழகபெரும தெரிவித்தார். தற்போது அவர் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.