ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு

by Staff Writer 19-05-2021 | 8:30 PM
Colombo (News 1st) தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு தேசிய இராணுவ நினைவுத்தூபிக்கு அருகே இன்று நடைபெற்றது. முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து நிகழ்வு ஆரம்பமானது. விமானப்படை விமானங்கள் மூலம் இராணுவ நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இராணுவ நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து Admiral of the fleet வசந்த கரன்னாகொட, Marshal of the air force ரொஷான் குணதிலக்க ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர்.