Colombo (News 1st) நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் நேற்று (17) உறுதிப்படுத்தப்பட்டன.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.
பொரலஸ்கமுவ, மெதகீபிய, வஸ்கடுவ, மக்கொன, களுத்துறை, பயாகல, மொறட்டுவை, அம்பேபுஸ்ஸ, காலி (இருவர்), இறம்புக்கனை, பொல்கொல்ல, கட்டுவன, பாதுக்க, தம்புள்ளை, தெனிய, ஹப்புகஸ்தலாவ, உடபிட்டிவல மற்றும் கடுவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.