நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு

நாட்டில் வார இறுதியில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு

by Chandrasekaram Chandravadani 17-05-2021 | 5:49 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, அன்றைய தினமே (25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.