இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பு

குறைந்தளவு ஊழியர்களுடன் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பு

by Staff Writer 17-05-2021 | 3:14 PM
Colombo (News 1st) குறைந்தளவு ஊழியர்களுடன் இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது. மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள், திணைக்களங்கள் அல்லது நிறுவனத் தலைவர்களினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் தமது நிறுவன அடையாள அட்டையை காண்பித்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.