சிறைக்கைதிகளை தொடர்புகொள்ள மீண்டும் வாய்ப்பு

வீடியோ தொழில்நுட்பத்தினூடாக சிறைக்கைதிகளை தொடர்புகொள்ள வாய்ப்பு

by Staff Writer 16-05-2021 | 3:13 PM
Colombo (News 1st) வீடியோ தொழில்நுட்பத்தினூடாக தமது உறவினர்களை தொடர்புகொள்வதற்கான வசதியை சிறைக்கைதிகளுக்கு மீண்டும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உறவினர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.prisons.gov.lk எனும் இணையத்திற்கு பிரவேசித்து, அதில் பதிவு செய்வதனூடாக உறவினர்கள், கைதிகளை தொடர்புகொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்களுடன் தொடர்புகொள்ள கைதி ஒருவருக்கு வாரத்திற்கு 15 நிமிடங்கள் எனும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.