சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு

by Staff Writer 16-05-2021 | 1:44 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 11,796 குடும்பங்களை சேர்ந்த 46,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாகவும் 636 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கொழும்பு, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்