கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 921 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 921 ஆக அதிகரிப்பு

by Staff Writer 15-05-2021 | 3:08 PM
Colombo (News 1st) 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 555 பேர் நேற்று (14) தொற்றினால் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதில் பிலியந்தலை பகுதியில் 126 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் 281 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 236 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 211 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,289 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று 29 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் பிரகாரம் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மரணங்களில் 24 பேர் COVID நிமோனியாவினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 1 இலட்சத்து 108 பேர் குணமடைந்துள்ளதுடன், 27,054 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.