முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு

by Staff Writer 14-05-2021 | 7:45 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸாரால் நேற்று (13) தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் அதிகார எல்லைக்குள் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை எவ்வித நிகழ்வுகளையும் நடத்தாதிருக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. COVID-19 தொற்று நிலையை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, சில தனிநபர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.