இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 14-05-2021 | 7:33 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 889 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,36,685 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,306 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,108 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதுடன், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.