LPL கிரிக்கெட் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பம்

LPL கிரிக்கெட் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பம்

by Bella Dalima 13-05-2021 | 4:41 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரை நடத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்நாட்களில் கவனம் செலுத்தப்படுவதாவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன முகாமைத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இவ்வருடம் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.