தபால் திணைக்கள சேவை நேரத்தில் மாற்றம்

தபால் திணைக்கள சேவை நேரத்தில் மாற்றம்

by Staff Writer 13-05-2021 | 11:12 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று (13) முதல் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சில பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தபாலை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் கூறினார்.