தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது

by Staff Writer 13-05-2021 | 12:51 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேல் மாகாணத்தில் நேற்றைய தினமும் (12) விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.