உரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கை பாதிப்பு

உரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கை பாதிப்பு

by Staff Writer 13-05-2021 | 6:49 PM
Colombo (News 1st) உரத்தட்டுப்பாடு நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது. பதுளை, வெலிமடை, ஊவபரணம, நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, சில்மியாபுர, பொரகஸ், ரேந்தபொல ஆகிய பகுதிகளில் அதிகளவில் மலர் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தற்போதைய உரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கையில் ஈடுபடுவோரின் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி அதனூடாக மேற்கொள்ளப்பட்ட மலர் செய்கையும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.