by Staff Writer 12-05-2021 | 9:01 PM
Colombo (News 1st) இன்று (12) பல பகுதிகளில் COVID தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மேல் மாகாணத்தில் வசிப்போருக்கு முப்படையினரின் ஒத்துழைப்புடன் Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
நாளாந்தம் சுமார் 30,000 பேருக்கு Sinopharm முதலாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக COVID நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
eChannel சேவை ஊடாக தடுப்பூசி ஏற்றுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.