நாளை (13) முதல் திங்கட்கிழமை வரை பயணத் தடை

நாளை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை 

by Staff Writer 12-05-2021 | 2:30 PM
Colombo (News 1st) நாளை (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேல் மாகாணத்தில் COVID-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு பயணக்கட்டுப்பாடு பொருந்தாது என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.