by Staff Writer 12-05-2021 | 2:07 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 435 பேர், 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் 8299 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மாகாணங்களுக்கிடையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை உரிய முறையில் பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முகக் கவசங்களை உரிய முறையில் பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.