எழுக தாய்நாடே பாடலின் புதிய வடிவம் வௌியீடு

by Staff Writer 12-05-2021 | 9:16 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றின் மற்றுமொரு அலையில் நாடு சிக்கியுள்ள நிலையில், இந்த சவாலுக்கு மத்தியில் நாட்டின் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கு இடமளிக்கும் வகையில், மக்கள் சக்தி எழுக தாய்நாடே பாடலின் புதிய வடிவம் இன்று வௌியிட்டு வைக்கப்பட்டது. இன்று காலை 9.45-க்கு அமைந்த சுப நேரத்தில் பாடல் வௌியிடப்பட்டது. இன்று முதல் இந்த பாடலை உங்கள் குரலில் பாடி 0777 600020 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த பாடலின் Karaoke இசையை Youtube ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.