by Bella Dalima 12-05-2021 | 8:15 PM
Colombo (News 1st) நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ளது.
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.