மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவை 

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவையை முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 11-05-2021 | 12:23 PM
Colombo (News 1st) இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.