குவைத் நாட்டிற்குள் பிரவேசிக்க 4 நாடுகளுக்கு தடை 

குவைத் நாட்டிற்குள் பிரவேசிக்க இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு தடை 

by Staff Writer 11-05-2021 | 1:58 PM
Colombo (News 1st) இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து பயணிப்போர் குவைத் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.