மாகாணத்திற்கு வௌியில் சுற்றுலா செல்லத் தடை

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணத்திற்கு வௌியில் சுற்றுலா செல்லத் தடை

by Staff Writer 11-05-2021 | 8:05 PM
Colombo (News 1st) இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணத்திற்கு வௌியில் சுற்றுலா செல்வதற்கும் வார இறுதி சுற்றுலாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வௌி மாகாணங்களை சேர்ந்தவர்களை ஹோட்டல்களில் அனுமதிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் நிறுவன அடையாள அட்டையை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.