இன்று முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு

இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்

by Staff Writer 11-05-2021 | 9:02 AM
Colombo (News 1st) இன்று (11) நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர  சில்வா தெரிவித்தார். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமைய, மாகாணங்களுக்குள்ளேயும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி கூறினார்.