by Staff Writer 10-05-2021 | 2:26 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்ட மக்களுக்கு நாளாந்தம் 20,000 சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகளை செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட மக்களுக்கு Sinopharm தடுப்பூசியை வழங்குவதற்காக இரண்டு நிலையங்கள் இன்று (10) இயங்குவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கெம்ப்பல் பார்க்கில் அமைந்துள்ள நிலையம் மற்றும் ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள நிலையத்தில் இன்று தடுப்பூசி வழங்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.