கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கொண்டுவரப்பட்டது

குவைத்தில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

by Staff Writer 10-05-2021 | 3:14 PM
Colombo (News 1st) குவைத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சடலம் வான் மார்க்கமாக நேற்று (09) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி, எத்தியோப்பியாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரால் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்தார். 39 வயதுடைய இலங்கை பணிப்பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் மீதான மரண விசாரணை நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.