வைரஸ் தொற்றாளர்களுக்கான PHI அதிகாரிகளின் கோரிக்கை

கொரோனா தொற்றாளர்களிடம் PHI அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை 

by Staff Writer 09-05-2021 | 1:50 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்தும் வீடுகளில் தங்கியுள்ள நோயாளர்கள், வீட்டிலிருக்கும் ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து விலகியிருந்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு சுகாதார நடைமுறைகளை பேணாவிடின், தொற்று பரவும் ஆபத்து தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.