புதிதாக 6 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டம்

புதிதாக 6 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டம்; 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை

by Staff Writer 08-05-2021 | 5:37 PM
Colombo (News 1st) நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா அவசர சிகிச்சை மற்றும் சுகாதார கட்டமைப்பிற்கான முன்னாயத்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். கொரோனா நோயாளர்களுக்காக 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டிலுள்ள 32 வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் செயற்றிட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் என மருத்துவர் ஜயசுந்தர பண்டார சுட்டிக்காட்டினார்.