COVID:764 பேர் உயிரிழப்பு, 121,338 பேருக்கு தொற்று

COVID:  764 பேர் உயிரிழப்பு,  1,21,338 பேருக்கு தொற்று

by Staff Writer 08-05-2021 | 7:58 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,21,338 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய (07) தினம் 1889 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 பேர் பெண்களாவர். கொரொனா தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்த அதிக எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளதுடன், இதுவரை 764 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் 1,335 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், 1,01,763 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.